Site icon Tamil News

கொழும்பு தமிழ் சங்கத்தின் முக்கிய அறிவித்தல்

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நாளைமறுதினம் (25) காலை 10.00 மணிக்கு சங்கத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் யாப்பு விதிகள் மீறப்பட்டு வருவதால், சங்கத்தின் கண்ணியத்தையும், சங்கத்தின் ஜனநாயகக் கட்டமைப்பையும் காக்க, பொதுக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என வாழ்நாள் உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது பொதுச் சபையின் ஒவ்வொரு உறுப்பினரின் முதன்மைக் கடமையாகும். புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் தேர்தலும் நடைபெறவுள்ளது.

இதேவேளை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகளை அம்பலப்படுத்தி சில சர்வாதிகார செயற்பாட்டாளர்களிடமிருந்து சங்கத்தின் மானத்தையும், சங்க ஜனநாயகத்தையும் காக்க அனைத்து உறுப்பினர்களும் பொதுச்சபை கூட்டத்தில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version