போதைப்பொருள் கடத்தலுடன் சட்டவிராேத துப்பாக்கிகளும் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக பொது மக்கள் பாதுபாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
விசேட அதிரடிப்படையின் சோதனையின் மூலம் கடந்த 3வருடங்களில் 1163 சட்டவிராேத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற வாய்மொழிமூலமான கேள்வி நேரத்தின் போது ஆளும் கட்சி உறுப்பினர் சஞ்ஞீவ எதிரிமான்னவினால் கேட்கப்பட்ட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் தற்போது மனித படுகொலைகள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.