டிசம்பர் 17, 2023 இல் ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் விளைவாக நாடு முழுவதும் 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 4,472 பேர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
41 கிலோகிராம் ஹெரோயின், 43 கிலோகிராம் ‘ஐஸ்’ மற்றும் 300,000 போதை மாத்திரைகள் உட்பட கணிசமான அளவு போதைப் பொருட்களை சட்ட அமலாக்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவா தெரிவித்தார்.
மேலும், “யுக்திய” மூலம் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.