Site icon Tamil News

ஶ்ரீலங்கன் விமான சேவையை ஒழுங்காக நடத்தாவிட்டால் மற்ற விமானங்கள் களமிறக்கப்படும்!

ஶ்ரீலங்கன் விமான சேவையை ஒழுங்காக நடத்தாவிட்டால் ஏனைய விமான சேவைகளை இலங்கையில் வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (09.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட விமான தாமதம் காரணமாக சுமார் 6 மில்லியன் டொலர்கள் கூடுதலாக செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

Exit mobile version