Tamil News

மட்டக்களப்பு- நாட்டில் மழை பெய்ய வேண்டி விசேட தொழுகை

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை நீங்கி மழை பெய்யவேண்டுமென ஆசிக்கும் விசேட தொழுகையும் பிரார்த்தனையும் இன்று (30) மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் நடைபெற்றன.

ஏறாவூர் ஜம்இய்யத்து உலமா சபையின் ஏற்பாட்டில் ஏறாவூர் அலிகார் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது மௌலவி எல்எச். அப்துல்லா ஹாஷிமி தொழுகை நடாத்தினார்.

இதையடுத்து கூட்டுப்பிரசங்கம் நடைபெற்றது. உலமா சபையின் புதிய தலைவர் மௌலவி ஏஎல். சாஜித் ஹுஸைன் பாகவி பிரார்த்தனை நடாத்தினார்.

மார்க்க அறிஞர்கள், மதரசா மாணவர்கள் , பொதுமக்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் என பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் மனமுருகி பாவமன்னிப்புக்கோரி பிரார்த்தனை செய்தனர்.

கிழக்கு மாகாணத்தில் மிக நீண்டகாலமாக மழை பெய்யாததன் காரணமாக நீர்நிலைகள் வற்றியுள்ளதையடுத்து சில பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மேலும் காட்டிலுள்ள பிராணிகள் குடிநீரின்றி அவஸ்த்தைப்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளளது.இந்த நிலையினைக்கருத்திற்கொண்டு ஏறாவூர் ஜம்இய்யத்து உலமா இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் சபை கூட்டுப்பிரார்த்தனை நடாத்த ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version