Site icon Tamil News

பழிக்கு பழி வாங்குவேன் – மறைமுகமாக மிரட்டிய டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதை கொலம்பியா நீதிமன்றம் உறுதி செய்தது.

இதுதொடர்பாக நீதவான நீதிமன்றத்தில் ஆஜரான டிரம்ப் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, தான் ஒரு நிரபராதி என வாதாடினார்.

பின்னர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில், ‘நீங்கள் என்னை பின்தொடர்ந்தால், நானும் உங்களை பின்தொடர்வேன்’ என பதிவு வெளியிட்டுள்ளார்.

இது அவருக்கு எதிரான சாட்சிகளை, வக்கீல்களை, நீதிபதிகளை மிரட்டும் வகையில் உள்ளது.

அவர் மீண்டும் பதவிக்கு வந்தால் பழிக்குபழி வாங்குவேன் என கூறுவதாக உள்ளது. எனவே, எந்த தகவலையும் வெளியிடுவதை தடுக்க டிரம்ப்புக்கு எதிராக பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்’’ என வாதாடினார்.

 

Exit mobile version