Site icon Tamil News

விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுக்கா மேல்வைலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி வயது 52 விவசாயம்செய்து வருகிறார்.

இவர் நேற்று இரவு இவரது மனைவி அம்பிகா வயது 47 உடன் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று உள்ளார்.அப்போது பெரியசாமி மோட்டார் கிளப்புவதற்காகமோட்டார் பட்டனை ஆன் செய்துள்ளார்

அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி உள்ளது அவரது மனைவி அவரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யப்போது அவரையும் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இன்று பெரியசாமியின் நிலத்தில் அருகில் விவசாயம் செய்யும் அண்ணாமலை என்பவர் அவரது விவசாய நிலத்தை சுற்றி பார்த்தபோது பெரியசாமி அவரது மனைவி மோட்டர் கொட்டகையில் கீழே விழுந்து இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து உடனடியாக அவலூர்பேட்டை போலீசாருக்கு அண்ணாமலை தகவல் தெரிவித்தது அடுத்து அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தஇருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்ச அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சுற்றுவட்டார கிராமத்தில் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version