Site icon Tamil News

இந்தியா வந்துள்ள சீனா பாதுகாப்பு அமைச்சர்

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபு இன்று இந்தியா வந்துள்ளார்.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா வந்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க சீனாவுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. சீனாவின் அழைப்பை ஏற்று அதன்படி அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இன்று இந்தியா வந்துள்ளார்.

கல்வான் பகுதியில் உள்ள எல்லையை அடிப்படையாக கொண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வந்துள்ளார்.

இந்த பயணத்தின் போது சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபுவும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார்.

Exit mobile version