Site icon Tamil News

கொழும்பு முறிந்து விழுந்த பாரிய மரம் – கடும் போக்குவரத்து நெரிசல்

கொழும்பு 07 பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு- கறுவாத்தோட்டம் பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

கிரிகோரி வீதியில் சம்போதி விகாரைக்கு அருகில் குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Exit mobile version