Site icon Tamil News

பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்துக்கள் : குறைந்தது 35 பேர் பலி!

பாகிஸ்தானில் சில மணி நேர இடைவெளியில் இரண்டு தனித்தனி பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கில் இருந்து ஈரான் வழியாக திரும்பிய ஷியா முஸ்லிம் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தென்மேற்கு பாகிஸ்தானில் நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

இதில் 12 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அதேபோல் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பேலா மாவட்டம் வழியாகச் செல்லும் போது பேருந்து பிரேக் பழுதடைந்து விபத்துக்குள்ளானதில் பலர் 29 பேர் இறந்ததாகக் கூறுகிறது. மீட்பு பணிகள் தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் தொடர்கின்ற நிலையில், எழுமாறாகவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலி எண்ணிக்கை உயர கூடும் எனவும் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version