Site icon Tamil News

கொழும்பு-அவிசாவளை வீதியில் இடம்பெற்ற கோர விபத்து : 22 பேர் காயம்!

கொழும்பு-அவிசாவளை வீதியின் ஹன்வெல்ல எம்புல்கம பகுதியில் பஸ்ஸும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து  இன்று (ஜூன் 09) காலை இடம்பெற்றது.

விபத்தைத் தொடர்ந்து பஸ் மற்றும் லொறியின் சாரதிகள் உட்பட குறைந்தது 22 பேர் காயமடைந்த நிலையில்,  ஹோமாகம மற்றும் நவகமுவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற லொறி, அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியே  விபத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version