மீகலேவ, மகாவலி தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள், வீதியில் இருந்து எடுத்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் அடங்கிய பார்சலை உரிமையாளரிடம் கையளித்துள்ளனர்.
மீகலேவ, மகாவலி தேசிய பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் இரு மாணவிகள் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர்.
இந்தச் செயலை மீகலேவ, தம்மிதா கிராமத்தைச் சேர்ந்த யுவனிகா மற்றும் சந்துனி இமல்கா ஜயசூரிய ஆகிய இரு மாணவிகளே இந்த செயலை செய்துள்ளனர்.
கற்றலில் சிறந்து விளங்கும் இந்த இரண்டு மாணவர்களும் கடும் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என மீகலேவ, மகாவலி தேசிய பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
இந்த இரண்டு மாணவர்களும் எங்கள் பாடசாலைக்கு புகழைக் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, நான் உட்பட நாட்டுக்கே உதாரணம் காட்டப்பட்டுள்ளது. இவ்விரு மாணவர்களுக்கும் பாடசாலையின் ஆசிரியப் பணியாளர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் பாராட்டு செலுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.