Site icon Tamil News

இலங்கையின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான முதற்கட்டப் பணிகள் நாளை (10.04) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 24.04.2024 அன்று முதல் பள்ளி தவணையின் இரண்டாம் கட்டம் தொடங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இது பொருந்தும்.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Exit mobile version