Site icon Tamil News

தனது கல்லறைக்கான இடத்தை அறிவித்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது கல்லறை அமைக்கப்பட வேண்டிய இடம் எது என்பதை அறிவிக்கும் விதமாக, “ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் எனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்” என நேற்று (13) மெக்சிகோ ஒளிபரப்பான டெலிவிசாவின் N+ ஸ்ட்ரீமிங் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வத்திக்கான் அதிகாரபூர்வ ஊடக தகவலின்படி, இதுவரை பரிசுத்த பாப்பரசர் பதவி வகித்த 7 பேரின் கல்லறைகள் வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிலேயே கட்டப்பட்டுள்ளன.

ஆனால், அங்கு தனக்கான கல்லறை அமைக்கப்பட விரும்பாமல், சான்டா மரியா மேகியார் (santa maria maggiore) பசிலிக்காவில் தனது கல்லறை அமைக்கப்பட வேண்டும் என தான் விரும்புவதாக 87 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கூறியிருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version