Tamil News

‘GOAT” இலங்கை படப்பிடிப்பு இரத்து! ரஷ்யா பறந்தார் அர்ச்சனா கல்பாத்தி

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்யின் கடைசி பட இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கிறது. அதேபோல் கோட் படம் எப்போது வெளிவரும் என்ற ஆர்வமும் ஒரு பக்கம் இருக்கிறது. இந்நிலையில் விஜய் கோட் பட டீமுக்கு ஒரு உத்தரவை போட்டிருக்கிறார்.

அதாவது மார்ச் இறுதிக்குள் முடித்து விட வேண்டும் என அவர் கண்டிஷனாக சொல்லிவிட்டாராம்.

அதனால் தற்போது வெங்கட் பிரபு நிற்க நேரமில்லாமல் பிஸியாக வேலை பார்த்து வருகிறார். அதேபோல் தயாரிப்பாளரும் தன் பங்குக்கு இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டாராம்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின் இலங்கை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் அதற்கு பதிலாக வேறொரு நாட்டில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ’கோட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு மற்றும் அவரது குழுவினர் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் ரஷ்யாவில் லொகேஷன் பார்க்கும் பணியை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களே எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது ரஷ்யாவில் இருக்கும் அர்ச்சனா லொகேஷன் பார்க்கும் பணியை செய்து வருவதாகவும் ஒரு சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தயாரிப்பாளர் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்கோவின் பனிபடர்ந்த புகைப்படத்தை பதிவு செய்து அதில் ’கோட்’ என்றும் பதிவு செய்துள்ளது அடுத்து இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version