Site icon Tamil News

பிரான்ஸில் சிறுமிக்கு நேர்ந்த கதி – முதல் முறையாக TikTokக்கிற்கு எதிராக முறைப்பாடு

பிரான்ஸில் முதல் முறையாக TikTokக்கிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸில் 15 வயது சிறுமி பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெறும் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் 2021 Bouches-du-Rhône பகுதியில் Marie என்னும் சிறுமியே இந்த முடிவை எடுத்துள்ளார்.

தனது தற்கொலைக்கு முன்னர் Marie, சமூகவலைத்தளமான TikTok ல் “தன் உடல் பருமனை காரணம் காட்டி பல மாணவர்கள் தன்னை அவமானப்படுத்தி துன்புறுத்துவதாக குறித்த சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தான் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் எனவும், அதற்காக எப்படி தற்கொலை செய்வது என தேடிவருகின்ற” பல ஒளிப்பதிவுப் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

இதனை அண்மையில் அறிந்து கொண்ட Marieன் பெற்றோர்கள் “தற்கொலைக்கு தூண்டுதல்”, “ஆபத்தில் இருக்கும் நபருக்கு உதவத் தவறியமை” மற்றும் “தன்னைத்தானே கொல்வதற்கான வழிமுறைகளைப் பிரச்சாரம் செய்தல் அல்லது விளம்பரப்படுத்துதல்” போன்ற குற்றங்களின் கீழ் சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் TikTok செயலி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்ததுள்ளனர்.

Exit mobile version