Site icon Tamil News

இலங்கையில் கடை ஒன்றில் தொலைபேசி திருடி சிக்கிய யுவதி – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தொலைபேசியைத் திருடிய யுவதியொருவர் ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு தம்புள்ளை நீதவான் சம்ருத் ஜஹான் உத்தரவிட்டதையடுத்தே அது இடம்பெற்றுள்ளது.

ஒரு தாய் மகளும் சிறுவனும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்துள்ளனர், அங்கு கவனமாக வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசியை மகள் திருடுவதும் தாய் மற்றொரு கையடக்கத் தொலைபேசியை திருடுவதும் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

கடையின் உரிமையாளர்கள் பாதுகாப்பு கமரா அமைப்பு மற்றும் தாயும் மகளும் எப்படி கடை உரிமையாளர்களுக்கு போனை கொடுத்தார்கள் என்ற வீடியோ காட்சிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

கையடக்கத் தொலைபேசி கடையின் உரிமையாளர் தம்புள்ளை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், திருட்டைச் செய்த தாயும் மகளும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதுடன், குறித்த கையடக்கத் தொலைபேசியை இந்தக் கடையின் உரிமையாளர்கள் தம்புள்ளை பொலிஸாரிடம் வழங்கியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தாய்க்கு எதிராக முறைப்பாட்டாளர் முறைப்பாடு செய்யாத காரணத்தினால் தாயை நீதிமன்றத்திற்கு அழைத்து வரவில்லை என தம்புள்ளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version