Site icon Tamil News

மொரட்டுவ நெடுஞ்சாலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட இராட்சத முதலை!

மொரட்டுவ லுனாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 8 அடி நீளமுள்ள முதலை ஒன்றை பிரதேசவாசிகள் இன்று (12.10) கண்டெடுத்துள்ளனர்.

முதலை கடற்கரையில் இருந்து ரயில் பாதையை கடந்து சென்றது போன்ற கால்தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்துதெஹிவளை மிருகக்காட்சிசாலை, பொலிஸாருக்கும், பெல்லன்வில அத்திடிய தள காரியாலயத்திற்கும் அறிவித்த போதும் இதுவரை எந்த அதிகாரியும் வரவில்லை எனவும்  பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Exit mobile version