Site icon Tamil News

அமெரிக்க ராணுவத்தை நாட்டை விட்டு வெளியேற கோரி ஜேர்மனியர்கள் போராட்டம்

அமெரிக்க ராணுவத்தினர் ஜேர்மனியை விட்டு வெளியேற வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன்னர்.

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் குறித்து நேட்டோ படையினர் ஜேர்மனியின் ரம்ஸ்டெயின் விமானப்படைத்தளத்தில் வியூகங்கள் வகுத்து அங்கிருந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகின்றனர்.

இதற்கு ஜேர்மனியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் வீதியில் திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி போரை நீட்டிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Exit mobile version