2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
2023கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்டன,
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.