Tamil News

திருமணத்திற்குப்பிறகு இந்த நடிகரின் வாழ்க்கையே மாறி விட்டது.. இப்போது என்ன செய்கின்றார் தெரியுமா?

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கும், தட்சிணாமூர்த்தி ராமர் எழுதி இயக்கும் படம் ‘கிரிமினல்’.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், கௌதம் கார்த்திக் தற்போது இப்படத்தில் தனது பகுதிகளுக்கு டப்பிங் பேசத் தொடங்கியுள்ளார்.

இது மதுரை பின்னணியில் உருவாகும் தீவிரமான க்ரைம் த்ரில்லர் கதை என்று கூறப்படுகிறது.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸுடன் இணைந்து பர்சா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார், நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கௌதம் கார்த்திக் குற்றம் சாட்டப்பட்டவராக நடிக்கும் போது, சரத்குமார் கிராமப்புற போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

கொளதம் கார்த்திக் படங்கள் பெரிதளவில் ஹிட் ஆகாத நிலையில், திருமணத்திற்குப்பிறகு அவருக்கு தொட்டதெல்லாம் துளங்கும் வகையில், அனைத்து படங்களும் அவருக்கு கைகொடுக்கின்றன.

அந்த வகையில் கிரிமினல் படம் அவருக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Exit mobile version