Tamil News

நிஜ குந்தவை எப்படி இருப்பார் தெரியுமா? கிடைத்தது அரிய புகைப்படம்….

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

சோழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் இந்த படைப்பில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்த கதாபாத்திரம் தான் இளவரசி குந்தவை.

சோழ சாம்ராஜ்யத்தை கட்டிக் காத்த தைரியமுள்ள இளவரசியான இவரின் கதாபாத்திரத்தில் தான் திரிஷா நடித்திருந்தார்.

ரியல் இளவரசி இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று பலரையும் வியக்க வைக்கும் வகையில் இருந்தது அவருடைய அழகும், நடிப்பும். அதுவே இப்போது திரிஷாவுக்கான அடையாளமாகவும் மாறி இருக்கிறது.

ஆனால் உண்மையில் இளவரசி குந்தவை நாச்சியார் எப்படி இருந்திருப்பார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த வகையில் சோழ இளவரசியின் அரிய புகைப்படம் ஒன்று மலேசிய நாட்டில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

அதில் அவர் பளபளக்கும் பட்டு உடையும், ஆபரணங்களும் என ஒரு ஓவியம் போல் இருக்கிறார். ஒரு இளவரசி இப்படித்தான் இருந்திருப்பாரோ என வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது அந்த புகைப்படம்.

இந்த புகைப்படமும், சோழர்கள் பற்றிய தேடலும் மணிரத்தினத்தின் படத்தின் பின் அதிகரித்துள்ளது. உண்மையான குந்தவை குறித்த தேடலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version