Site icon Tamil News

சாமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

தென்னாபிரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 139 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்துவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சாமரி அத்தபத்துவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இந்தப் போட்டியில், இலங்கை அணி துரத்தி அடித்தமையே இதுவரையிலான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான ரன் சேஸிங்காக அமைந்தது.

Exit mobile version