Site icon Tamil News

பிரான்ஸ் மக்களின் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க தயாராகும் அரசாங்கம்

பிரான்ஸில் சமூகவலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

மதவாதம் கொண்ட நபர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களது கணக்கே கண்காணிக்கப்படவுள்ளது.

end-to-end encryption என அழைக்கப்படும் பிற நபர்களால் கண்காணிக்க முடியாத குறுந்தகவல்களை தேவை கருதி அவை பார்வையிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

WhatsApp, Signal, Telegram போன்ற செயலிகளில் இந்தend-to-end encryption வசதி உள்ளதால் பயங்கரவாதிகளால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

எனவே சந்தேகத்துக்கு இடமானவர்கள் பயன்படுத்தும் மேற்படி செயலிகளில் பரிமாறப்படும் தகவல்கள் உடைக்கப்பட்டு அவை கண்காணிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version