Site icon Tamil News

கனடாவில் நான்கு பேர் சடலமாக மீட்பு

கனடா – தென்மேற்கு ஒன்றாரியோ நகரில் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஆண், பெண், இரண்டு குழந்தைகள் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Windsor நகருக்கு தெற்கே உள்ள Harrow நகரில் நான்கு பேர் இறந்த நிலையில் ஒன்றாரியோ பொலிஸாரினால் கடந்த 20ஆம் திகதி மீட்கப்பட்டனர்.

இவர்களின் மரணத்திற்கான காரணம், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் ஆகியன இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ஒன்றாரியோ மாகாண பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version