Site icon Tamil News

புதையல் தோண்டிய சந்தேகத்தில் நால்வர் கைது : பொலிஸார் தீவிர விசாரணை

தொரமடலாவ புதுக்குளம் பிரதேசத்தில் தொல்பொருட்களை பெறும் நோக்கத்தில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் நால்வரை கைது செய்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொரமடலாவ புதுக்குளம் பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவருக்கு சொத்தமான காணியொன்றில் புதையல் தோண்டி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version