Site icon Tamil News

பிரான்ஸில் இருந்து அடுத்தடுத்து வெளியேற்றப்படும் வெளிநாட்டவர்கள்

பிரான்ஸில் இருந்து 15 வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சர் Gérald Darmanin இதனை தெரிவித்துள்ளார்.

24 தொடக்கம் 51 வயது வரையுள்ள 15 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அச்சுறுத்தலாக அமைவார்கள் என தெரிவிக்கப்பட்டு நாடு கடத்தப்படுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கொண்டு நடமாடுவது, கொள்ளையில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த நவம்பர் மாத ஆரம்பத்தில் 20 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர்.

கடந்த சில நாட்களாக அடுத்ததடுத்து வெளிநாட்டவர்கள் பலர் வெளியேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version