Site icon Tamil News

சீரற்ற காலநிலை காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவா, கோவை, அபுதாபி, புனே, ராஞ்சி, ஐதராபாத், கொல்கத்தா உள்பட 10 விமனங்கள் பலத்த மழை பெய்தால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.

வானிலை சீரானதும் பறந்த கொண்டிருந்த ஒன்றின் பின் ஒன்றாக தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட்ட வேண்டிய டெல்லி, அபுதாபி, ஐதராபாத் உள்பட 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தால் விமான சேவைகளில் சற்று பாதிக்கப்பட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version