ஈஸிஜெட் விமானம் “200 மீட்டர் சரிந்ததால்” பயணிகள் திகிலடைந்துள்ளனர்.
181 பயணிகளுடன் கோர்புவிலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்ட விமானமே குறித்த அனர்த்தத்தை சந்தித்துள்ளது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், 484 மைல் வேகத்தில் பயணித்தமையால் கொந்தளிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு விமான பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
விமானத்தை ரோமின் ஃபியூமிசினோ விமான நிலையத்திற்கு திருப்பிவிட, விமானி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு கடுமையான காயங்களுக்கு ஆளானதாக நம்பப்படுகிறது.
இதன் விளைவாக குறித்த விமானமானது இத்தாலியின் ரோம் நகரத்தில் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.