Site icon Tamil News

நோவா ககோவ்கா அணை உடைந்ததில் ஐவர் பலி!

நோவா ககோவ்கா அணை உடைந்ததில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஐவர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவால் நிறுவப்பட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) மூவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையையும் சேர்ந்துதான் ரஷ்ய பிரதிநிதி அறிவித்துள்ளாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும் ஐவர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அணை வெடிப்பினால் ஏற்பட்ட அழிவின் முழு அளவு மெல்ல மெல்ல தெளிவாகத் தெரிகிறது.

இதன்படி  14,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகளை மேற்கோள் காட்டி சுமார் 4,300 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறியது.

600 சதுர கி.மீ.க்கும் அதிகமான கெர்சன் பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும், 2000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் சுத்தமான தண்ணீர் இன்றி தவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version