Site icon Tamil News

“முதலில் கழுத்தை அறுத்து, பின்னர் கைகளை வெட்டி நீக்கினேன்” – பிரதீபா கொல்லப்பட்டது எப்படி

கொழும்பு புறநகர் பகுதியான முல்லேரியாவைச் சேர்ந்த பிரதீபா டி சில்வா கொலைச் சம்பவம் தொடர்பில் பல உண்மைகள் வெளியாகியுள்ளன.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போதே இது தெரியவந்துள்ளது.

பொலிஸாரிடம் சரணடைந்த பிரதான சந்தேகநபரின் திட்டத்திற்கமைய இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணின் கழுத்தை அறுத்த பின், தலை மற்றும் கைகள் வெட்டப்பட்டன. நேற்று (02) பொலிஸாரிடம் சரணடைந்த பிரதான சந்தேகநபர் இது தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரதான சந்தேகநபர் சியாம்பலாபே தெற்கு பகுதியில் வசிப்பவர் என்றும் புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட தொழிலதிபர் இந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். எனினும், குறித்த பெண் தனக்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக சந்தேநகநபர் கூறியுள்ளார்.

குறித்த பெண்ணை கொன்று மறைத்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட தொழிலதிபர் இறந்த பெண்ணை குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

அதன்பின், கழுத்தை அறுத்து கொன்றதுடன், பின்னர் அவரது தலை மற்றும் கைகள் உடலில் இருந்து பிரிக்கப்பட்டது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு வர்த்தகர் வீடு மற்றும் சொத்துக்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வாடகை அடிப்படையில் சொத்தை கொடுத்து மாத வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version