Site icon Tamil News

எல்ல நகரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

எல்ல நகரில் இன்று (31) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எல்ல நகருக்கு அருகில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த ஒருவர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா ஹோட்டல் ஊழியர் ஒருவர் சுடப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version