Site icon Tamil News

இஸ்ரேலில் இலங்கையர்களின் நிலை!! தூதுவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார

இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் அங்குள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுடனும் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் கூறுகிறார்.

இன்று (11) இஸ்ரேலில் இருந்த மூன்று இலங்கையர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தூதுவர் குறிப்பிடுகிறார்.

சுஜித் பிரியங்கரா என்ற இலங்கையர், படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய போதிலும், தூதரகம் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவருக்கு தேவையான சிகிச்சைகள் தொடர்பிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன மற்றுமொரு பெண் மற்றும் ஒரு இளைஞன் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை என்றும் தூதுவர் வலியுறுத்துகிறார்.

Exit mobile version