Tamil News

திருகோணமலை-தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்ட தீப்பரவல்

திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலை ஆறு மணி அளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்திய சாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தெரிய வருகின்றது

இருந்தும் தீப்பற்றியமைக்காண காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version