Site icon Tamil News

உக்கிரம் காட்டும் ரஷ்யா! உக்ரைன் மீது 40 ஏவுகணைகளை கொண்டு தாக்குதல்

ரஷ்யா ஒரே நாள் இரவில் உக்ரைன் மீது அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது.

இதுகுறித்து உக்ரேனிய விமானப்படை நேற்று வெளியிட்டுள்ள தகவலில், “உக்ரைனின் கீவ் நகரம் அதிக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

ரஷ்ய ஏவுகணை தாக்குதலை இடைமறித்து அழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவிலிருந்து இதுவரை மொத்தம் 40க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளன.

கப்பல், பாலிஸ்டிக் ஏவுகணை, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் நவீன போர் முறைகள் மூலம் 20க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் அதன் இலக்கை அடைய தவறின” என தெரிவித்துள்ளது. வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்தார். அங்கு 26 கட்டிடங்கள் சேதமடைந்தன என உக்ரைனின் அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version