Site icon Tamil News

மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கை – இந்திய இடையேயான படகு சேவை

இந்தியா – இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி இந்த படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் சில காரணங்களால் இன்று (17) வரை ஒத்திவைப்பதாக கப்பல் சேவை நிறுவனம் அண்மையில் அறிவித்தது.எனினும் எதிவரும் 19ஆம் திகதி வரை மீண்டும் அந்த படகு சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ள.

அந்தமானில் இருந்து நாகைக்கு வரவேண்டிய பயணியகள் கப்பல் தாமதமானதால், இவ்வாறு படகு சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பயணத்தை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொண்ட பயணிகள் மே19 அல்லது அதற்குப் பின்னர் தாம் விரும்பிய திகதிகளில் பயணிக்க முடியும் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version