Site icon Tamil News

ஜெர்மனியில் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி – துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்

ஜெர்மனியில் கொலோன் நகரத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் படுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனி நீதி மன்றத்தில் வழங்கப்பட்ட சாட்சியில் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 15 வயதுடைய சிறுவன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முறையே 18 மற்றும் 20 வயதுடைய 2 இளைஞர்களுக்கு எதிராக கொலோனில் உள்ள நகர நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்றுள்ளது.

அதாவது போதை பொருட்கள் கடத்தல் விடயத்தில் இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த 2 குற்றவாளிகளாக கருதப்படுகின்ற 18 வயதுடைய 20 நபர்களுக்கு எதிராக இவர் கொலோன் நீதி மன்றத்தில் சாட்சியம் முன் வை்ககப்பட்டுள்ளது.

கடத்தி செல்லப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டதாகவும், பின்னர் கொலை செய்த பிறகு அவரது இறந்த உடலை இந்த கடற்கரையில் வீசிவிட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version