Site icon Tamil News

பாணந்துறையில் பிரபல பெண் போதைப்பொருள் வியாபாரி கைது

பிரபல பாதாள உலக பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘குடு சலிந்து’வின் பெண் கூட்டாளி ஒருவர் வலனா தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் ‘குடு சலிந்து’ என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷிகா குணரத்னவின் போதைப்பொருள் கடத்தலை நடத்தி வந்ததாக கூறப்படும் ‘பட்டா’ என்ற பெயரால் கைது செய்யப்பட்டவர் ‘அசிதா’வின் மைத்துனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்படி, 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பானந்துறையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் ‘பட்டா’ தற்போது மேலும் இரண்டு நீதிமன்ற வழக்குகள் உள்ளதாகவும், அதே நேரத்தில் அவரது சகோதரி மற்றும் தந்தையும் அதே குற்றச்சாட்டுகளுக்காக தற்போது போலீஸ் காவலில் இருப்பதாகவும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version