நாள்தோறும் தன் மகனை விட்டுவிட்டு படப்பிடிப்புக்குக் கிளம்பும்போது தன்மனம் வேதனையில் துடிப்பதாகச் தென்னிந்திய பிரபல நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதற்காக பெற்ற மகனை அலட்சியப்படுத்துவதாக யாரும் கருதிவிடக் கூடாது என்றும் தன் மகனுக்கு முன்னால் ஒரு பலமான தாயாக நிற்பதையே தாம் விரும்புவதாகவும் அவர்ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“இன்னும் பச்சிளம் குழந்தையாக உள்ள என் மகனுக்காக உரிய நேரத்தை ஒதுக்குகிறேன். அன்பைப் பகிர்வதிலும் குறை வைப்பதில்லை. என் மகனின் தேவைகள் நிறைவேறுவதை உறுதி செய்வதுடன், எனது திரைப்பட பணிகளையும் உரிய வகையில் திடட்மிட்டுக் கொள்கிறேன்.
“யார் என்ன நினைத்தாலும் எனக்குக் கவலையில்லை. முதன் முறையாக என் மகனை மார்போடு அணைத்தபோது நன்றாக வளர்க்க முடியுமா எனப் பயந்தேன். ஆனால் எல்லாவற்றையும் மெல்ல மெல்ல கற்றுக்கொண்டு வருகிறேன். குழந்தை வளர்ப்பை முன்வைத்து என்னைச் சிலர் கேலியும் கிண்டலும் செய்கின்றனர். அவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை,” என்கிறார் காஜல் அகர்வால்.
இதேவேளை காஜல் அகர்வால் அண்மையில் கண் அழகு தொடர்பான புதிய படைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தி பெண் தொழிலதிபரானமை குறிப்பிடத்தக்கது.