Tamil News

PS-2 ஐஸ்வர்யாராயிடம் இதை கவனித்தீர்களா? அளவில் பெரிதாகியதால் ஏற்பட்ட நிலை…

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தபோது ஐஸ்வர்யா ராய்க்கு காதிலிருந்து ரத்தம் வந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது, அரச குல பெண் கதாபாத்திரம் என்பதால் அவருக்கு அளவில் பெரிதான தோடுகள் கொடுக்கப்பட்டன.

அவ்வளவு பெரிய தோடுகளை அவர் இதறகு முன் அணிந்ததில்லை. எனவே காதில் அந்த தோடுகளை மாட்ட மாட்ட ஒருகட்டத்தில் காயமாகி ரத்தம் வந்துவிட்டதாம்.

இதனை உதவி இயக்குநர்களும் மணிரத்னத்திடம் சொல்லவில்லையாம்.

மேலும், தோடுகளே அணிய முடியாத சூழலும் உருவாகியிருக்கிறது. இதனை ஒருவழியாக தெரிந்துகொண்ட மணிரத்னம், ஒருபக்கம் காது தெரியாதபடி ஐஸ்வர்யா ராயின் கூந்தலை வைத்து காதை மறைத்து ஷூட்டிங்கை நடத்தினார் என தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது.

Exit mobile version