Site icon Tamil News

திருமலை – மூதூர் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர்!

திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி அகஸ்தியஸ்தாபனம் பகுதியில் நேற்றய தினம்(01) காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்தவர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை சிவசம்பு (63) என தெரியவருகின்றது.

குறித்த நபர் சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கங்குவேலி – படுகாட்டுப் பகுதியில் மேற்கொண்டுவரும் வயலுக்கு இரவுநேர யானை காவலுக்காக சென்றிருந்தபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் மொறவெவ -கோமரங்கடவல பகுதிகளில் இதுவரை ஒரு வருடத்திற்குள் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Exit mobile version