Site icon Tamil News

பொலிஸில் பொய் முறைப்பாடு!! ஹோட்டலில் இருந்து தப்பியோடிய பிரித்தானியர்

பொய் முறைப்பாடு செய்த பிரித்தானிய பிரஜை தொடர்பில் அலவத்துகொட பிரதேசத்தில் இருந்து செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.

பிரித்தானிய பிரஜை அலவத்துகொடையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.

இவர் தங்கியிருந்த அறையின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

90,000 ரூபா பணம், 2 கைக்கடிகாரங்கள், கெமரா ஆகியவை திருடப்பட்டுள்ளதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த போது, சந்தேகத்திற்குரிய பிரித்தானிய பிரஜை விசாரணைகள் தேவையற்றது எனவும், காப்புறுதி இழப்பீடு பெறுவதற்கு ஆவணம் ஒன்றே போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பிரஜையின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளின் போது, அறையின் கதவுகள் உள்ளே இருந்து உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி, தற்போது சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர் பொலிஸாரைத் தவிர்த்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version