Site icon Tamil News

புறக்கோட்டையில் காலவதியான பால் மா!! நாட்டின் பல பாகங்களுக்கும் விற்பனை

புறக்கோட்டையில் உள்ள கடை ஒன்றில் விற்பனைக்கு தயாராக இருந்த 825 கிலோ காலாவதியான பால்மா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனை மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று, புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் விசேட சோதனை நடத்தியதுடன், அங்கிருந்த பால் மா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது, ​​நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு விற்பனையாளர்கள் இந்த காலாவதியான பால்மாவை எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version