Site icon Tamil News

தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!

முன்னாள் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய சபை, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.

இதன்படி சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், விசேட பொலிஸ் பாதுகாப்பில் இன்று தோண்டி எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மரணத்திற்கான காரணத்தை சரிபார்க்க ஷாஃப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டியது அவசியம் என கடந்த விசாரணையின்போது கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரியவிடம் நிபுணர் குழு தெரிவித்திருந்தது.

Exit mobile version