Tamil News

கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னாள் இராணுவக் கும்பல் ஸ்பெயின் பொலிசாரால் கைது

தெற்கு மலகா மாகாணத்தில் ஆடம்பர வீடுகளில் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னாள் இராணுவக் கும்பலைத் தாம் கைது செய்துள்ளதாக ஸ்பெயின் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அல்பேனியாவைச் சேர்ந்த தலைவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கும்பல் பெரும்பாலும் மார்பெல்லாவில் உள்ள சொகுசு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 71 திருட்டுகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் திருட்டு மற்றும் உடைப்புகளில் “மிகவும் திறமையானவர்கள்” என்று போலீசார் கூறுகின்றனர்.

Exit mobile version