Tamil News

ஐரோப்பா முழுவதும் அதிரடி சோதனை: 22 பேர் கைது

குற்றவியல் வலையமைப்பின் கீழ் நடத்தப்பட்ட சோதனையில் ஐரோப்பா முழுவதும் போலீசார் சொகுசு குடியிருப்புகள், வில்லாக்கள், ரோலக்ஸ் வாட்ச்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இத்தாலி, ஆஸ்திரியா, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் வியாழனன்று சுமார் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

எட்டு சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், 14 பேர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெனிஸில் உள்ள ஐரோப்பிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் (EPPO) தலைமையில் பெரிய அளவிலான சர்வதேச விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

2021 மற்றும் 2023 க்கு இடையில் இத்தாலிய கோவிட் மீட்பு நிதியிலிருந்து € 600m (£515m) மோசடி செய்ததாக குழு சந்தேகிக்கப்படுகிறது.

வெனிஸில் உள்ள ஐரோப்பிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் (EPPO) தலைமையில் பெரிய அளவிலான சர்வதேச விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

அதிகாரிகள் ஐரோப்பா முழுவதும் பொலிஸ் படைகளுடன் இணைந்து டஜன் கணக்கான சோதனைகளை நடத்தி மில்லியன் கணக்கான சொத்துக்களை மீட்டனர்.

இந்த சோதனையின் போது பிளாட்கள், வில்லாக்கள், ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், கார்டியர் நகைகள், தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சிகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியதாக இத்தாலியின் நிதிக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version