புட்டினின் ‘பவர் பிளே’களால் ஐரோப்பா பயப்படாது என ஜேர்மன் தலைவர் Olaf Scholz, தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு முயற்சிகளை மிக நெருக்கமாக ஒருங்கிணைக்க வே்ண்டும் எனத் தெரிவித்தார்.
வடகிழக்கில் புடின் 2200 கிலோமீற்றர் தொலைவில், தனது வீரர்கள், டாங்கிகள், மற்றும் ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளார். ஆகவே பாதுகாப்பு தொழில்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.
உக்ரைனுக்கான வெடிமருந்துகளை கூட்டாக வாங்க வேண்டும். இதுபோன்ற பவர் பிளேக்களால் நாங்கள் பயப்படக்கூடாது எனத் தெரிவித்தார்.