Site icon Tamil News

பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – 450 பவுண்ட் சேமிக்கலாம்

பிரித்தானியாவில் புதிய கணிப்புகளுக்கமைய, எதிர்வரும் ஜுலை மாதம் முதல் ஒரு பொதுவான குடும்பத்திற்கான எரிசக்தி கட்டணம் 450 பவுண்ட் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்சல்டன்சி நிறுவனமான கார்ன்வால் இன்சைட், மே மாதம் 25ஆம் திகதி அன்று Ofgem ஆல் அறிவிக்கப்படும் புதிய அதிகாரப்பூர்வ விலை வரம்பின் கீழ் கட்டணங்கள் 446 பவுண்ட் வரை குறையும் என்று கணித்துள்ளது.

அரசாங்கத்தின் எரிசக்தி விலை உத்திரவாதத்தின் காரணமாக ஒரு பொதுவான பயனர் தனது ஆற்றலுக்காக வருடத்திற்கு 2,500 பவுண்ட்டிற்க்கு மேல் செலுத்துகின்றது.

ஜூலை மாதத்திற்கான புதிய விலை வரம்பு 2,054 பவுண்டாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

பின்னர் ஒக்டோபரில் 1,976 பவுண்டிற்கு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சராசரி குடும்பத்திற்கான Ofgem இன் தற்போதைய வரம்பு 3,280 பவுண்ட் ஆகும், ஆனால் அரசாங்கத்தின் உத்தரவாதத் திட்டம் குறைந்த வரம்பைக் கொண்டிருப்பதால் நுகர்வோர் நேரடியாக பாதிக்கப்படுவதில்லை. ஜூலையில் உச்சவரம்பு வீழ்ச்சியடைந்து உத்தரவாதத்திற்கான வரம்பு 3,000 பவுண்டாகக உயரும் போது மாறும்.

உத்தரவாதத் திட்டம் வரும் மார்ச் மாதம் முழுமையாக முடிவடைகிறது. இந்த கணிப்புகளின் கீழ், ஒரு சராசரி நுகர்வோர் தற்போதுள்ள எரிசக்தி விலை உத்தரவாதத்தின் நிலைகளுடன் ஒப்பிடும்போது சுமார் 450 பவுண்ட் கட்டணம் குறைவதைக் காண்பார்கள். தற்போதைய கட்டணங்களை அடுத்த ஒன்பது மாதங்களில் ஒப்பீட்டளவில் நிலையானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பின்னர் ரொக்கட் வேகத்தில் உயர்ந்ததால் மொத்த எரிசக்தியின் விலை அதிகரித்தது.

Exit mobile version