Site icon Tamil News

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு – பெண்ணால் ஏமாற்றப்பட்ட மக்கள்

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து, 10 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு, வேலைவாய்ப்பை பெற்றுத்தரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதற்கமைய, பணியக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version