Site icon Tamil News

எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு இதுவரை இல்லாத வருமானம் – ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கியுள்ளது.

டுபாயின் முதன்மையான விமான நிறுவனமான எமிரேட்ஸ் வியாழன் அன்று அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் அவர்களது 20 வார சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்தது.

நிறுவனத்தின் சாதனை வருமானம் காரணமாக இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டதாக தலைவர் ஷேக் அஹமட் பின் சயீத் அல் மக்தூம் தெரிவித்தார்.

ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்த அவர், பெறப்படும் ஒவ்வொரு திர்ஹாமும் ஊழியர்களின் அர்ப்பணிப்பின் பலன் என்று குறிப்பிட்டார்.

எமிரேட்ஸ் விமான சேவையின் ஊழியர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்து 112,406 ஆக உயர்ந்துள்ளதாகவும் கடந்த வருடம் அவர்களுக்கு 24 வார சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கப்பட்டதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

எமிரேட்ஸ் குழுமம் 2023-2024 நிதியாண்டில் 71 சதவீத வளர்ச்சியுடன் 18.7 பில்லியன் திர்ஹாம்களை சாதனை படைத்துள்ளது.

எமிரேட்ஸ் மற்றும் dnata இரண்டும் கணிசமான லாபம் மற்றும் வருவாய் வளர்ச்சியை அடைந்தன, 47.1 பில்லியன் திர்ஹாம் பண இருப்புடன், நிறுவனத்தின் 38 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்சமாகும்.

நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த தலைவர், புதிய விமானங்களை கொள்வனவு செய்து பயிற்சி பெற்ற ஊழியர்களை இணைத்துக்கொள்வதன் மூலம் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version